ECONOMY

கால்பந்து போட்டியின் போது நடுவர் திடீர் மரணம்

15 பிப்ரவரி 2022, 4:09 AM
கால்பந்து போட்டியின் போது நடுவர் திடீர் மரணம்

கோலாலம்பூர்,பிப் 15: நேற்றுமுன்தினம் மதியம் காஜாங்கின் தாமன் பெர்ஜாயாவில் கால்பந்து போட்டியின் நடுவராக இருந்த உள்ளூர் நபர் ஒருவர் திடீரென மரணமடைந்தார்.

மாலை 4.17 மணியளவில் சுயநினைவை இழந்த 50 வயதுடைய நபர் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜைத் ஹாசன் தெரிவித்தார்.

போட்டி நடந்த 19 நிமிடங்களில், ​​​​போட்டி நடுவராக இருந்த பாதிக்கப்பட்டவர் மைதானத்தின் நடுவில் சுருண்டு விழுந்தார் என்பது சம்பவ இடத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆம்புலன்ஸ் தரப்பினர் பாதிக்கப்பட்டவரை தொடர்ந்து பரிசோதித்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாக முகமது ஜைத் கூறினார்.

 

-பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.