ALAM SEKITAR & CUACA

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது

3 பிப்ரவரி 2022, 4:31 AM
கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் உள்ளது

ஷா ஆலம், பிப் 3- கோலக் கிள்ளான் கடலோரப் பகுதியில் இன்று காலை கடல் பெருக்கு கட்டுப்பாட்டில் இருந்ததாக சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கூறியது.

இன்று காலை 7.33 மணியளவில் கடலில் நீர் மட்டம் மிதமான அளவு அதாவது 4.9 மீட்டராக இருந்ததாக அப்பிரிவின் துணை நிர்வாக அதிகாரி முகமது இஸாட் ஹபிஸ் முகமது நாசீர் கூறினார்.

வெள்ளம் ஏற்படும் அளவுக்கு கடல் நீர் கரை புரண்டோடும் சம்பவம் ஏதும் நிகழவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றார் அவர்.

இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கிள்ளான் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களில்  கடல் பெருக்கு ஏற்படும் என்று தேசிய ஹைட்ரோகிராபிக் மையம் கூறியிருந்தது.

கெடா மாநிலத்தின் கோல கெடா, பேராக் மாநிலத்தின் பாகான் டத்தோ, ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் மற்றும் பத்து பகாட்டிலும் இதே நிலை நீடிக்கும் என்றும் அது தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.