ECONOMY

பெர்மாத்தாங் தொகுதியில் 384 பேர் வெள்ள உதவித் தொகையைப் பெற்றனர்

19 ஜனவரி 2022, 11:34 AM
பெர்மாத்தாங் தொகுதியில் 384 பேர் வெள்ள உதவித் தொகையைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 19- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊஜோங் பெர்மாத்தாங் மற்றும் தஞ்சோங் காராங் துணை மாவட்டங்களைச் சேர்ந்த 384 குடும்பத்தினர் மாநில அரசின் வெள்ள உதவித் தொகையான 1,000 வெள்ளியைப் பெற்றனர்.

கடந்த மாத மத்தியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வீட்டிலேயே தங்கியிருந்தவர்களுக்கு இந்த மூன்றாம் கட்ட நிதியளிப்பின் போது உதவித் தொகை வழங்கப்பட்டதாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

முதல் கட்டத்தில் 253 பேருக்கும் இரண்டாம் கட்டத்தில் 58 பேருக்கும் நிதி வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் வெள்ளத்தின் போது நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களாவர் என்றார் அவர்.

இரட்டை விண்ணப்பங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவித் தொகை கூடிய விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

சில இடங்களில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தையும் மகனும் உதவி நிதிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதனால் மனுக்களை பரிசீலிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.