ECONOMY

 2.5 கோடி மலேசியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்- 23 விழுக்காட்டினருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

10 ஜனவரி 2022, 8:35 AM
 2.5 கோடி மலேசியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்- 23 விழுக்காட்டினருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஜன 10- நாட்டின் மக்கள் தொகையில் 78.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 708 பேர்  நேற்று வரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே சமயம், 23.9 விழுக்க்காட்டினர் அல்லது 78 லட்சத்து 9 ஆயிரத்து 058 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரத்து 770 பேர்  பெரியவர்கள் என்றும் 27 லட்சத்து 5 ஆயிரத்து 938 பேர் இளையோர் என்றும் சுகாதார அமைச்சின் கோவிட்நாக் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, நேற்று 110,258 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 910 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,500 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 107,848 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.