ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வெள்ளி வரை உதவித் தொகை வழங்குவீர்- டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து

4 ஜனவரி 2022, 5:42 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வெள்ளி வரை உதவித் தொகை வழங்குவீர்- டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 4- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 முதல் 10,000 வெள்ளி வரை உதவித் தொகையை உயர்த்தி வழங்கும்படி அரசாங்கத்தை டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பேரிடரால் ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மிகந்த வேதனையிலும் நெருக்கடி நிலையிலும் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

ஊழியர் சேம நிதி வாரியத்திலிருந்து நிதியை மீட்க அரசாங்கம் அனுமதிக்காத நிலையில் இந்த வெள்ளப் பேரிடரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவுக்கேற்ப 5,000 முதல் 10,000 வெள்ளி வரை உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அளவுக்கதிகமான நிர்வாக நடைமுறைகளை திணிப்பதன் மூலம் மக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம். இத்தகைய நிர்வாக நடைமுறைகள் உதவி வழங்குவதை மேலும் தாமதப்படுத்தும் என்றார் அவர்.

பொது மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இத்தகைய சூழலில் அவர்களுக்கு உதவுவதற்கான வழிவகைகளை அரசாங்கம் உடனடியாக ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.