ECONOMY

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2,077 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

27 டிசம்பர் 2021, 6:48 AM
வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2,077 டன் குப்பைகள் அகற்றப்பட்டன

ஷா ஆலம், டிச 27 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நேற்று இரவு 9.00 மணி வரை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனஜ்மெண்ட் கழிவு மேலாண்மை நிறுவனம் மூலம் சுமார் 2,077 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு நிறைவான  சேவைகள் வழங்குவது  தொடர்ந்து உறுதிசெய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று டிசம்பர் 26 ஆம் தேதி  இரவு 9.00 மணி நிலவரப்படி 336  லாரிகள் மற்றும் 51 மண்வாரி இயந்திரங்களைப் பயன்படுத்தி மொத்தம் 2,077 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றியுள்ளோம். இப்பணியில் அதிகாரிகள் உள்ளபட 767 பேர் பஙகேற்றனர் என்று முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்தது.

சிலாங்கூரில் வெள்ளத்திற்குப்பிந்தைய துப்பரவுப்  பணிகள்  தொடர்ந்து துரிதப்படுத்துவதாக அநநிறுவனம் மேலும் கூறியது.

முன்னதாக, உலு லங்காட், பூச்சோங், மேரு, செமினி, மற்றும் கம்போங் பெஸ்தாரி ஜெயா உள்ளிட்ட  பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப்பிந்தைய தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.