ECONOMY

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,981 ஆக குறைந்தது

27 டிசம்பர் 2021, 4:11 AM
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,981 ஆக குறைந்தது

ஷா ஆலம், டிச 27- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 60 தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் நேற்று இரவு 10.00 மணி வரை 11,981 பேர் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் 95 துயர் துடைப்பு மையங்களில் 17,912 பேர் தங்கியிருந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியிருந்தார்.

தற்காலிக துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 60 துயர் துடைப்பு மையங்களில் 2,992 குடும்பங்களைச் சேர்ந்த 11,981 பேர் தங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம் வடிந்த போதிலும் துயர் துடைப்பு மையங்கள் தற்போதைக்கு மூடப்படாது என்று மந்திரி புசார் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில பேரிடர் செயல்குழுவின் முடிவுக்குப் பின்னரே அந்த மையங்களை மூடுவது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.