ECONOMY

96.1 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசி பெற்றனர்

28 நவம்பர் 2021, 7:59 AM
96.1 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், நவ 28- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி  வரை 96.1 விழுக்காடு அல்லது 2 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரத்து 497 பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 98.4 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.2 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 76 ஆயிரத்து 260 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 84.7 விழுக்காட்டினர் அல்லது 26 லட்சத்து 64 ஆயிரத்து 877 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 54,526 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 4,737 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 2,522 பேர் முதல் தடுப்பூசியையும் 47,267 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி  பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது. 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.