ECONOMY

சிலாங்கூர் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் முதல் இடத்தில் சீனா உள்ளது - MB

21 நவம்பர் 2021, 6:51 AM
சிலாங்கூர்  வெளிநாட்டு முதலீட்டாளர்களில் முதல் இடத்தில் சீனா உள்ளது - MB

கோலாலம்பூர், நவ. 21 - 2015 ஆம் ஆண்டு முதல் உற்பத்தித் துறையில் 6 பில்லியன் ரிங்கிட்களுக்கு மேல் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளுடன் சீனா சிலாங்கூரில் முதன்மையான முதலீட்டாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகிறார்.

2020 ஆம் ஆண்டில் மொத்த வர்த்தகத்தில் 18.6 சதவிகிதம் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பதைத் தவிர, வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) சீனாவின் பங்கு, அரசுக்கு அவசியம் என்று மந்திரி புசார் கூறினார்.

“பெரிய எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சிலாங்கூரில் உள்ளனர், மேலும் சிலாங்கூர்-சீனா உறவுகளில் முன்னேற்றத்திற்கான ஒரு பெரிய சாத்தியமும் உள்ளது.

பதினோராவது மலேசியா-சீனா தொழில்முனைவோர் மாநாட்டின் (எம்சிஇசி 2021) அதிகாரப்பூர்வ விழாவின் போது அமிருடின் வரவேற்றுப் பேசுகையில், “நாட்டிலேயே மிகவும் வளர்ந்த மாநிலம் சிலாங்கூர், 2020 ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சியில் 24.3 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது என கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் கூறினார்.

இன்று வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் டத்தோ டெங் சாங் கிம், மலேசியாவுக்கான சீன மக்கள் குடியரசுத் தூதர் ஓயாங் யுஜிங் மற்றும் மலேசியா-சீனா வர்த்தக சபையின் (எம்சிசிசி) தலைவர் டத்தோ டான் இயூ சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

MCEC 2021 சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சிமாநாடு (SIBS) 2021 உடன் இணைந்து நடத்தப்பட்டது, இது நவம்பர் 18 அன்று தொடங்கி இன்று முடிவடைகிறது.

இதற்கிடையில், தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஸ்மார்ட் மாநிலமாக சிலாங்கூரை உருவாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அமிருடின் கூறினார்.

“தென்கிழக்கு ஆசியாவின் முதல் ஸ்மார்ட் மாநிலமாக அங்கீகரிக்கப் படுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை சிலாங்கூர் பெற இந்தத் திட்டம் உதவும், இதனால் மாநிலத்தின் குடிமக்கள் வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை முறைகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்கும்.

"2016 ஆம் ஆண்டில் சிலாங்கூர் பிராந்தியத்தின் முதல் ஸ்மார்ட் மாநிலமாக இருக்க அரசு திட்டமிட்டிருந்தது, மேலும் அந்த யோசனை சிலாங்கூர் கோவிட்-19 ன் போது, அவசரத் தேவைகளை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மாற்றியமைக்க உதவியது" என்று அமிருடின் கூறினார். 2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூர் ஆசியானின் முதன்மையான ஸ்மார்ட் ஸ்டேட்டாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.