MEDIA STATEMENT

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்றனர்

1 நவம்பர் 2021, 6:08 AM
தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி பெற்றனர்

 தஞ்சோங் சிப்பாட், நவ 1- தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். தடுப்பூசியைப் பெற்றவர்களில் பூர்வக் குடியினரும் அடங்குவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார். இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு தொகுதி மக்கள் முழு ஆதரவு வழங்கியுள்ளனர். நடமாட முடியாத நிலையிலிருக்கும் வயதானவர்களின் வீடுகளுக்கு  சுகாதாரப் பணியாளர்கள் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தினர் என்றார் அவர். தற்போது, 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவிததார். நேற்று பத்து லாவுட் கடற்கரையை தூய்மைப் படுதுத்தும் இயக்கத்தில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.