ECONOMY

கிள்ளான் மருத்துவமனையின் தினசரி சிகிச்சை மையம் திங்களன்று திறக்கப்படும்

28 ஆகஸ்ட் 2021, 10:33 AM
கிள்ளான் மருத்துவமனையின் தினசரி சிகிச்சை மையம் திங்களன்று திறக்கப்படும்

ஷா ஆலம், ஆக 28- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தினசரி சிகிச்சைப் மையம் வரும் திங்கள்கிழமை தொடங்கி செயல்படும். இதற்கு முன்னர் இந்த மையம் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவாக செயல்பட்டு வந்தது.

கிள்ளான், ஸ்ரீ அண்டாலாஸ் மற்றும் கோலக்கிள்ளான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் அபாயகர இரசாயன தடுப்பு சிறப்புக் குழுவினர் கடந்த இரு தினங்களாக இந்த மையத்தில் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணிகள் யாவும் முழுமை பெற்றவுடன் வரும் திங்கள் கிழமையன்று இம்மையம் நோயாளிகளுக்கு திறக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த மையத்திலுள்ள கிளினிக்குகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதம் தொடக்கம் முதல் 50 விழுக்காடு குறைந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.