ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 22,597, சிலாங்கூரில் நேற்று 5,920 பேர் பாதிப்பு

28 ஆகஸ்ட் 2021, 10:24 AM
கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இன்று 22,597, சிலாங்கூரில் நேற்று 5,920 பேர் பாதிப்பு

ஷா ஆலம், ஆக 28- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 22,597 ஆக பதிவானது.

சிலாங்கூரில் நேற்று 5,920 ஆக இருந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 5,814 ஆக ஆகியுள்ளது. 

போர்னியோ மாநிலங்களான சபா மற்றும் சரவாவில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சபாவில் 2,834 சம்பவங்களும் சரவாவில் 2,427 சம்பவங்களும் பதிவான வேளையில் தீபகற்ப மலேசியாவில் கெடா மாநிலம் 2,162 நேர்வுகளைப் பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு அடுத்த நிலையில் பினாங்கு (1,989), ஜொகூர் (1,896), கோலாலம்பூர் (1,111) பேராக் (1,061) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- திரங்கானு (739), பகாங் (579), மலாக்கா (269), பெர்லிஸ் (98), புத்ரா ஜெயா (48), லபுவான் (5).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.