ECONOMY

கோவிட் -19 காரணமாக மலேசியாவில் ஐந்து பேரில் நான்கு பேருக்கு சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது

18 ஆகஸ்ட் 2021, 10:32 AM
கோவிட் -19 காரணமாக மலேசியாவில் ஐந்து பேரில் நான்கு பேருக்கு  சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது

  • கோலாலம்பூர், ஆகஸ்ட் 18: கோவிட் -19 காரணமாக வீட்டில் அதிக நேரம் செலவழித்தபின் சுமார் 73 சதவிகித மலேசியர்கள் தங்கள் வீடுகளை புனரமைக்க விரும்புகிறார்கள் என்று 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் சொத்துகுரு என்ற அகப்பக்க கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
  • கணக்கெடுப்பின் முடிவுகள் 38 சதவிகிதத்தினர் தங்கள் குடியிருப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை புதுப்பிக்க விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது.
  • அதே நேரத்தில் மற்றொரு 35 சதவிகிதத்தினர் ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது தற்போதைய இடத்திலிருந்து மாறி செல்லவோ விரும்புகின்றனர்.
  • ஆய்வின் படி, கோவிட் -19 தொற்றுநோய் மலேசியர்களின் குடியிருப்பு இடத்தைப் பற்றிய நான்கு நபர்களில் மூன்று பேரை (77 சதவீதம்) பாதித்துள்ளது.
  • சொந்தமாக ஒரு வீடு அல்லது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சொத்துக்கு மாறுவதற்கான விருப்பத்தின் அதிகரிப்பு குறிப்பாக வாடகை வீடுகளில் (74 சதவீதம்), பெற்றோருடன் வாழும் நபர்கள் (63 சதவீதம்) மற்றும் குறைந்த வருவாய் வாழ்பவர்கள் 50 விழுக்காடும் மாற எண்ணம் கொண்டுள்ளனர்.
  • சொத்து குரு மலேசிய நாட்டின் மேலாளர் ஷெல்டன் பெர்னாண்டஸின் கூற்றுப்படி, மலேசியா கடந்த 17 மாதங்களாக பல்வேறு வகையான இயக்கக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ளது மற்றும் வீட்டில் செலவழிக்கும் நேரம், பலருக்கும் தங்கள் சொந்த இடத்தின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் உணர்த்தியுள்ளது, குறிப்பாக தொலைதூரத்தில் வேலை செய்பவர்கள் அதனை நன்கு உணர்ந்துள்ளனர்.
  • மலேசியாவில் உள்ள இளைஞர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் இன்னும் பெற்றோருடன் வசிக்கும் இளைஞர்கள் மத்தியில் 'அதிக தனிப்பட்ட இடம் தேவை' என்று குறிப்பிடும் தாக்கம் அதிகமாக உள்ளது.
  • அவர்கள் புதிய வீடு வாங்குவதற்கான முக்கிய காரணங்கள், ”என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
  • இந்த ஆய்வில், சொத்து வாங்க விரும்புபவர்கள் கூறிய மூன்று முக்கிய காரணிகள் முதலீட்டு நோக்கங்களுக்காக (43 சதவீதம்), அதிக தனிப்பட்ட இடத்தேவை (26 சதவீதம்) மற்றும் குறைந்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது (27 சதவீதம்).
  • அவரைப் பொறுத்தவரை, சாதகமான வட்டி விகிதங்கள் மற்றும் விலை வாய்ப்புகள் மற்றும் அதிக தற்போதைய சொத்து திருப்தி ஆகியவை ஒட்டுமொத்த சென்டிமென்ட் இன்டெக்ஸ் மதிப்பாய்வை 2021 முதல் பாதியில் 42 லிருந்து 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் 45 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
  • மறுபுறம், தற்போதைய ரியல் எஸ்டேட் காலநிலை குறித்த மலேசியர்களின் உணர்வு 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 35 புள்ளிகளிலிருந்து 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் 32 ஆக குறைந்தது.
  • "இருப்பினும், எதிர்காலத்தில் மலேசியாவில் ஐந்து பேரில் நான்கு பேர் சொத்து வாங்க உத்தேசித்துள்ளதால், சொந்த வீடு வேண்டும் என்ற ஆசை மலேசியர்களிடையே வலுவாக உள்ளது" என்று பெர்னாண்டஸ் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.