ECONOMY

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 18,688 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 6,565 சம்பவங்கள் பதிவு

8 ஆகஸ்ட் 2021, 10:15 AM
கோவிட்-19 எண்ணிக்கை இன்று 18,688 ஆக குறைந்தது- சிலாங்கூரில் 6,565 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஆக 8- நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை இன்று மேலும் குறைந்துள்ளது. நேற்று 19,257 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 18,688 ஆக ஆனது.

 சிலாங்கூரிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை 7,084 இல் இருந்து 6,565 ஆக ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாம்பூரில் இன்று 1,883 நேர்வுகள் பதிவான வேளையில்  கெடா, சபா மற்றும் ஜோகூரில் முறையே 1,610, 1,379 மற்றும் 1,308 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

இதனிடையே நெகிரி செம்பிலானில் நோய்த் தொற்று எண்ணிக்கை 1,140லிருந்து 884 ஆகவும் பெர்லிசில் 41லிருந்து 6ஆகவும் வீழ்ச்சி கண்டன.

நாட்டின் இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-

கிளந்தான் (870), பேராக் (861), பினாங்கு (694), பகாங் (602), திரங்கானு (598), சரவா (581), மலாக்கா (526), புத்ரா ஜெயா (63), லபுவான்(2).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.