ECONOMY

50 மாணவர்களுக்கு கையடக்க கணினிகள்- எம்.பி.ஐ. வழங்கியது

24 ஜூலை 2021, 10:33 AM
50 மாணவர்களுக்கு கையடக்க கணினிகள்- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 24- இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு எம் பி. ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் கையடக்க கணினிகளை வழங்கியது.

மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் இந்த கணினிகள் வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. வர்த்தக சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி முகமது நோர் கூறினார்.

இந்த கணினிகளுக்கான விண்ணப்பங்கள் அரசு சாரா அமைப்புகள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள் மூலம் கிடைக்கப் பெற்றதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த உபகரணங்கள் பெரிதும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.