ஷா ஆலம், ஜூலை 23- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று வரலாறு காணாத அதிகரிப்பை கண்டது. மொத்தம் 15,573 பேர் இந்நோயினால் பிடிக்கப்பட்ட வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 13,034 ஆக இருந்தது.சிலாங்கூரில் இந்நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இம்மாநிலத்தில் நேற்றைய கோவிட்-19 எண்ணிக்கை 6,049 ஆகும்.
இன்றைய சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 980,491 ஆக அதிகரித்துள்ளது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 2,063 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 937 சம்பவங்களுடன் கெடாவும் உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வருமாறு-
நெகிரி செம்பிலான் (682), பினாங்கு,(530), பேராக்( 415), மலாக்கா (452), ஜோகூர் (722), பகாங் (457), திரங்கானு(229), கிளந்தான் (372), சரவா (461), சபா (516), லபுவான் 21), புத்ரா ஜெயா (41), பெர்லிஸ் (3)
ECONOMY
15,573 சம்பவங்களுடன் வரலாறு காணாத அதிகரிப்பை கண்டது கோவிட்-19 : சிலாங்கூரில் 7,672 சம்பவங்கள்
23 ஜூலை 2021, 11:31 AM
தொடர்புடைய செய்திகள்
health
கிள்ளான் மருத்துவமனையில் தீவிபத்து- பாதுகாப்பு அம்சங்கள் மீது விரிவான சோதனை
n.pakiya
23 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
வெ.62 லட்சம் வசூல்- பஸ், லோரி நிறுவனங்களின் 34,371 சம்மன் களுக்கு தீர்வு- ஜே.பி ஜே.
n.pakiya
27 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




