ECONOMY

நாட்டில் 8,868 சம்பவங்கள்-புதிய உச்சத்தை தொட்டது கோவிட்-19 நோய்த் தொற்று

8 ஜூலை 2021, 2:08 PM
நாட்டில் 8,868 சம்பவங்கள்-புதிய உச்சத்தை தொட்டது கோவிட்-19 நோய்த் தொற்று

ஷா ஆலம், ஜூலை 8- மொத்தம் 8,868 சம்பவங்களுடன்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று புதிய உச்சத்தை தொட்டது. நாட்டில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்டப் பின்னர் பதிவான அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்று சம்பவம் இதுவாகும்.

அதேசமயம், சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்து 4,152 ஆக பதிவாகியுள்ளது. 2,000 முதல் 3,000 வரையிலான வழக்கமான எண்ணிக்கையை விட இது  அபரிமித உயர்வாகும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூரில் 1,133 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 897 சம்பவங்களும் பேராக்கில் 543 சம்பவங்களும்  பதிவானதாக அவர் சொன்னார்.

நாட்டில் இன்று பதிவான மொத்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையில் 60 விழுக்காடு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அடையாளம் காணப்பட்டவையாகும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.