MEDIA STATEMENT

மக்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

7 ஜூலை 2021, 1:30 PM
மக்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

ஷா ஆலம், ஜூலை 7- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உணவுக் கூடைகளை விநியோகிக்கும் பணியை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

முன்னாள் பணியாளர்கள், ரேலா உறுப்பினர்கள், பால பள்ளி நடத்துநர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பகுதி நேர புகைப்படக்காரர்களுக்கு விநியோகிப்பதற்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் 2,700 உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்துள்ளது.

இந்த உணவுப் பொருள் விநியோகம் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப் படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இந்த பொது முடக்க காலத்தில் பொது மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்த கூடுதல் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பொது முடக்கம் காரணமாக, குறிப்பாக கடுமையாக்கப்பட்ட நடமட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என்றார் அவர்.

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருள்  வழங்கப்படும் வேளையில் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் இதர வட்டார மக்களுக்கு உதவி வழங்கி வருவதாக அதன் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

செலாயாங் நகராண்மைக் கழகத்தின் சார்பில் இரு இடங்களில் உணவு வங்கித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகராண்மைக்கழகத் உறுப்பினர்  பூக் வாய் மூன்  தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.