ECONOMY

பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில்  50 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

21 ஏப்ரல் 2021, 8:48 AM
பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில்  50 வெள்ளி கட்டணத்தில் கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், ஏப் 21- பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 50 வெள்ளி கட்டணத்தில்  கோவிட்-19 பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனை இயக்கத்தில் ஆர்.டி.கே.-ஏஜி விரைவு சோதனைக் கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்த சோதனை இயக்கத்திற்கு  #PKBU 017-2373005 புலனம் வாயிலாக பதிவு செய்யும் முதல் 500 பேருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று தொகுதி உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த சோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் அடையாளக் கார்டு மற்றும் மின்சார அல்லது குடிநீர் கட்டண பில்லை உடன் கொண்டு வர வேண்டும் எனக் கூறிய அவர், பண்டார் உத்தாமா தொகுதிக்கு வெளியில் உள்ளவர்களுக்கும் 70 வெள்ளி கட்டணத்தில் இந்த சோதனை நடத்தப்படும் என்றார்.

இந்த பரிசோதனை இயக்கம்  திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை  பெட்டாலிங் ஜெயா, ஜாலான் எஸ்.எஸ். 20/27இல் உள்ள லைப் கிளினிக்கில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு பெறுவோர்  நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிதுறைகளை முறையாக கடைபிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.