SELANGOR

மந்திரி புசாருக்கு கோவிட் தொற்று இல்லை நாளை பணியைத் தொடக்குகிறார்

11 அக்டோபர் 2020, 11:25 AM
மந்திரி புசாருக்கு கோவிட் தொற்று இல்லை  நாளை பணியைத் தொடக்குகிறார்

ஷா ஆலம், அக் 11- மூன்றாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பணியை நாளை அதிகாரப்பூர்வமாக தொடக்குகிறார்.

அதோடு மட்டுமின்றி தனிமைப்படுத்திக் கொள்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட 14 நாள் கால அவகாசத்தையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

சபா மாநிலத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரும்பியது முதல் மேற்கொள்ளப்பட்ட மூன்று கோவிட்-19 சோதனைகளிலும் தமக்கு அந்நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்று அமிருடின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாளை முதல் பணியை அதிகாரப்பூர்மாக தொடக்கவிருக்கிறேன்.

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றும் அதேவேளையில் உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணித்து வருவேன் என அவர் மேலும் தெரிவித்தார். தாம் கடைபிடித்து வந்த 14 நாள் தனிமையிலிருந்து சுகாதார அதிகாரிகள் விடுத்த தோடு கையில் கட்டியிருந்த இளஞ்சிவப்பு வளையத்தையும் அகற்றியதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.