NATIONAL

தங்கும் விடுதியிலுள்ள மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் யுனிசெல் பல்கலைக்கழகம் உறுதி

11 அக்டோபர் 2020, 10:50 AM
தங்கும் விடுதியிலுள்ள மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்  யுனிசெல் பல்கலைக்கழகம் உறுதி

ஷா ஆலம், அக் 11- பெஸ்தாரி ஜெயா மற்றும் ஷா ஆலமிலுள்ள பல்கலைக்கழக தங்கும் விடுதிகளில் தங்கிருக்கும் சுமார் 1,700 மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.

கோவிட் நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்கும் விதமாக அம்மாணவர்களுக்கு உணவு விநியோகம், சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும் துணை வேந்தருமான இணைப் பேராசிரியர் டாக்டரை ஹம்டான் முகமது சாலே கூறினார்.

இம்மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைன் எனப்படும் இயங்கலை வாயிலாக  தேர்வில்  10,000 மாணவர்கள் பங்கு கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.