PBT

பொது முடக்க பகுதிகளிலிருந்து வெளியே செல்ல போலீஸ் அனுமதி தேவை

9 அக்டோபர் 2020, 6:48 AM
பொது முடக்க பகுதிகளிலிருந்து வெளியே செல்ல போலீஸ் அனுமதி தேவை

கிள்ளான், 9- இங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வேலை மற்றும் முக்கிய அலுவல் நிமித்தம் வெளியே செல்ல விரும்பினால் முன்கூட்டியே போலீஸ் அனுமதியை பெற வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துறையின் முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்

டத்தோ நூர் அஸாம் ஜமாலுதீன் கூறினார்.

கிள்ளான் வட்டாரத்திலுள்ள பாயு பெர்டானா,  ஸ்ரீ அண்டலாஸ், புக்கிட் திங்கி ஆகிய

பகுதிகளில் சாலைத் தடுப்பு போடப்படுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

போலீஸ் நிலையங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அனுமதி பாரங்களை கையாள்வதற்கு சம்பந்தபட்ட இடத்தில் நடமாடும் போலீஸ் நிலையம் அமைக்கப்

பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்ல விண்ணப்பம் செய்வோர்

அனுமதி கடிதத்தையும் சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயணம் அவசியமானதானா என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு விண்ணப்பமும் விரிவாக பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.