NATIONAL

கோவிட்-19 நோயைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கம் தேவை டத்தோ ஸ்ரீ அன்வார்  வலியுறுத்து

6 அக்டோபர் 2020, 7:52 AM
கோவிட்-19 நோயைத் தடுக்க கடுமையான சட்ட அமலாக்கம் தேவை டத்தோ ஸ்ரீ அன்வார்  வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 6-  கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு வெளிப்படையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்க்

கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றுவதில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்பதோடு சட்ட அமலாக்கத்திலும் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்நோய் பரவல் தொடர்பில் ஊகங்களும் வதந்திகளும் பரப்பப் படுவதை தவிக்க அரசாங்கம் இதுகுறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

பிரச்சனையான காலகட்டத்தில் மக்கள் நலன்களைக் காப்பதில் இரு தரப்பையும் சேர்ந்த அரசியல்வாதிகளும்  தலைமைத்துவ மாண்பை வெளிப்படுத்துவது அவசியம்

என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒன்று பட்டும் உத்தரவுகளை பின்பற்றியும் நடப்பதன் வாயிலாக மட்டுமே பெருந் தொற்றிலிருந்து விடுபட்டு சுபிட்சமான நாடாக ஆக முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் விரைவில் குணமடைய தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.