NATIONAL

மாநில ஆட்சிக்குழு கூட்டத்தை இயங்கலை மூலம் நடத்தினார் மந்திரி புசார்

30 செப்டெம்பர் 2020, 2:43 PM
மாநில ஆட்சிக்குழு கூட்டத்தை இயங்கலை மூலம் நடத்தினார் மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 30- கோவிட் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்றைய மாநில ஆட்ட்சிக்குழு கூட்டத்தை ஆன்லைன் எனப்படும் இயங்கலை வாயிலாக நடத்தினார்.

புதிய இயல்புக்கு ஏற்ற வகையில் மாநில அரசு நிர்வாகம் வழக்கம் போல் செயல்படுவதாக அவர் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்தார்.

இந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற இரு ஆட்சிக்குழு உறுப்பினர்களான புர்ஹான் அமான் ஷா மற்றும் முகமது ஜவாவி அகமது முக்னி ஆகியோரும் பங்கேற்றதாக அவர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் சபாவிலிருந்து திரும்பிய அமிருடின் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனது அதிகாரத்துவ  வீட்டிலிருந்தவாறே அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

அவர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. எனினும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை வீட்டிலிருந்தவாறே தனது பணிகளைக் கவனிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மந்திரி புசார் நேரடியாக கலந்து கொள்ளும் நிகழ்வுகள் இதர ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.