NATIONAL

பெண்ணிடம் கொள்ளை முயற்சி நான்கு வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்தனர்

10 செப்டெம்பர் 2020, 12:42 PM
பெண்ணிடம் கொள்ளை முயற்சி நான்கு வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்தனர்

கோலாலம்பூர், செப் 10- பெண்மணி ஒருவரிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பதின்ம வயதினரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சுங்கை பீசி, கம்போங் மலேசியா ராயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் நிகழ்ந்தது.

அந்தப் பெண் சாலையோரம் நின்று கொண்டிருந்து போது 16 வயது இளம் பெண் ஒருவர் அவரை அணுகி தன் தாயாரிடம் பேசுவதற்கு  கைத்தொலைபேசியை இரவல் தருமாறு கேட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது மொக்சேன் முகமது ஜூன் கூறினார்.

அந்த பெண் தனது கைப்பேசியை எடுத்து எண்களை அழுத்திக் கொண்டிருந்த போது அந்த பதின்ம வயது பெண் திடீரென அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக அவர் சொன்னார்.

அருகிலுள்ள உணவகத்தில் இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணையும் அவரது மூன்று சகாக்களையும் துரத்திப் பிடித்து போலீல் ஒப்படைத்தாக அவர் தெரிவித்தார்.

 

அந்தப் பெண்ணும் 14 முதல் 17 வயது வரையிலான மூன்று இளைஞர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.