கோலாலம்பூர், செப், 9- இன்று புதிதாக 24 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 18 சம்பவங்கள் உள்நாட்டில் பரவியவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.
பாதிக்கப்பட்ட அந்த 18 பேரில் 16 பேர் மலேசியர்கள் என்றும் எஞ்சிய இருவர் வெளிநாட்டவர் என்றும் அவர் சொன்னார்.
உள்நாட்டினர் சம்பந்தபட்ட 13 சம்பவங்கள் சுங்கை தொற்று மையத்திலிருந்து பரவியவை எனக் கூறிய அவர், எஞ்சியவை தாவார், தலாகா, சுல்தானா மருத்துவமனை கண்காணிப்பு பிரிவையும் சேர்ந்தவை என்றார்.
நாட்டின் பிரஜைகள் அல்லாத இருவர் சம்பவங்கள் லஹாட் டத்து, பெந்தேங் தொற்று மையத்தை சேர்ந்தவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.








