RENCANA PILIHAN

சிலாங்கூர் மாநில துணை சபாநாயகரை ஜூலை 13-இல் அறிவிக்கப்படும்- மந்திரி பெசார்

4 ஜூலை 2020, 5:16 AM
சிலாங்கூர் மாநில துணை சபாநாயகரை ஜூலை 13-இல் அறிவிக்கப்படும்- மந்திரி பெசார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4:

எதிர் வரும் ஜூலை 13-இல் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் வேட்பாளரை அறிவிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் இதன் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் இனம் மற்றும் பாலினம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உயர்நிலை தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். ஆண் அல்லது பெண் வேட்பாளர் என்ற கேள்விக்கு இடமில்லை. மேலும், இனரீதியான முறையிலும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்," பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் கேர்ஸ் குழுவினரின் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு அமிருடின் ஷாரி வலியுறுத்தினார். மந்திரி பெசாருடன் கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் சத்ரி மன்சூர் மற்றும் திஎஸ் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அமாட் பக்ரீன் சோபாஃவி அபு பாக்கார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.