NATIONAL

கோவிட்-19 நோயாளிகள் வெறும் 164 பேர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் !!!

30 ஜூன் 2020, 2:44 PM
கோவிட்-19 நோயாளிகள் வெறும் 164 பேர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் !!!

புத்ராஜெயா, ஜூன் 30:

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 புதிய கொவிட்19 பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,639-ஆக உயர்ந்துள்ளது.புதிதாக அடையாளம் காணப்பட்ட 2 பாதிப்புகளில், ஒரு சம்பவம் இறக்குமதி செய்யப்பட்டதாகும். உள்ளூரிலேயே ஒருவர் தொற்றுக் கண்டுள்ளார்.

இன்று 20 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,354-ஆக உயர்ந்தது. நாட்டில் மொத்தம் 164 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.