NATIONAL

சுகாதார அமைச்சு: பிகேபிபி காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 சம்பவங்கள்

30 ஜூன் 2020, 11:49 AM
சுகாதார அமைச்சு: பிகேபிபி காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 சம்பவங்கள்

புத்ராஜெயா, ஜூன் 30:

கடந்த ஜூன் 10 முதல் அமல்படுத்தப்பட்ட மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் மொத்தம் 303 கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இந்த காலகட்டத்தில் அன்றாட நோய் சம்பவங்கள் ஒன்று அல்லது இரண்டு இலக்கண எண்ணிக்கையை கொண்டது குறிப்பிடத்தக்கது.

" கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் பொது மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.