NATIONAL

எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இரண்டாம் முறையாக மாற்றியமைக்கப் பட்டது !!!

28 ஜூன் 2020, 1:51 PM
எஸ்பிஎம் தேர்வு அட்டவணை இரண்டாம் முறையாக மாற்றியமைக்கப் பட்டது !!!

புத்ராஜெயா, ஜூன் 28:

எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கான அட்டவணை இரண்டாம் முறையாக மாற்றியமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 9-ஆம் தேதி வரை என்று கல்வி அமைச்சு முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்னர் இவ்வாண்டு நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரையில் எஸ்.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்பட்டிருந்தது.

இதனிடையே,  மறு எஸ்.பி.எம் தேர்வுக்கான தேதி 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஆகஸ்ட் 17-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே வேளையில், எஸ்.வி.எம் தேதிக்கான முதல் தவணை 13-ஆம் தேதி தொடங்கி மே 24-ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கும் 28-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 9-ஆம் தேதிக்கு  மாற்றப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.