NATIONAL

கடந்த 2008 தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 82 கைவிடப்பட்ட திட்டங்கள் மீட்சி பெற்றுள்ளன !!!

28 ஜூன் 2020, 8:43 AM
கடந்த 2008 தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 82 கைவிடப்பட்ட திட்டங்கள் மீட்சி பெற்றுள்ளன !!!
கடந்த 2008 தொடங்கி சிலாங்கூர் மாநிலத்தில் 82 கைவிடப்பட்ட திட்டங்கள் மீட்சி பெற்றுள்ளன !!!

ஷா ஆலம், ஜூன் 28:

மாநிலத்தில் கைவிடப்பட்ட 179 வீடமைப்பு மற்றும் வணிக மேம்பாட்டு திட்டங்களில் 82-ஐ சிலாங்கூர் மாநில அரசாங்கம் 2008 முதல் நிறைவு செய்துள்ளது. அசல் திட்ட ஆவணங்களைப் பெறுதல், மேம்பாட்டு பரிமாற்றம் மற்றும் நிதி அனுமதிகள் ஆகிய காரணங்களினால் 33,421 வீடுகள் அல்லது கடைகள் உள்ளடக்கியதாக மாநில  வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்  தெரிவித்தார்.

" இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு ஒரு ஊராட்சி மன்றங்கள் அளவிலான கைவிடப்பட்ட திட்ட மீட்புக் குழுவை அமைத்துள்ளது. இதன் மூலம் ஊராட்சி மன்றங்கள் முன்னுரிமை திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகளை பட்டியலிட்டுள்ளது" என்று ஹனிசா தல்ஹா இன்று சிலாங்கூரைத் தொடர்பு கொண்டபோது கூறினார். கைவிடப்பட்ட மொத்த திட்டங்களில், 141 மாநில அரசுக்கு சொந்தமானவை, மீதமுள்ளவை தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது ஆகும்.

இதற்கிடையில், 292 வீட்டுத் திட்டங்களில் 129,108 யூனிட்டுகள் இதுவரை நிறைவடைந்துள்ளன என்று ஹனிசா தெரிவித்தார். "சிலாங்கூர் அரசாங்கம் கடந்த ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குள் எனது வீட்டின் 30,000 யூனிட்டுகள்  நிர்மாணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.