NATIONAL

வேளாண்மை தொழில் முனைவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது- மந்திரி பெசார்

8 ஜூன் 2020, 7:53 AM
வேளாண்மை தொழில் முனைவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது- மந்திரி பெசார்

ஷா ஆலம், ஜூன் 8:

வேளாண்மை தொழில்முனைவோருக்கு குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் , மீனவர்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்துறையினருக்கு நிலையான உணவு விநியோகத்திற்கான திறன் மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரிம 1.5 மில்லியன் ஒதுக்கீடு இந்த உதவியில் அடங்கும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

" பசி பட்டினி ஏற்படாமல் இருக்கவும், உணவுப் பாதுகாப்பையும், சிறந்த ஊட்டச்சத்தையும் அடைவதற்கும், நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (எஸ்டிஜி) ஏற்ப வேளாண்மை மற்றும் மீன்வளத் துறைகளில் வேளாண் தொழில்முனைவோருடன் சிலாங்கூர் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது," என்று அவர் இன்று டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ரிம 1,500 மற்றும் அதற்குக் குறைவான நிகர வருமானம் ஈட்டும் விவசாயிகளுக்கு அடிப்படை உணவு உதவிக்காக ரிம 500,000 ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், புதிய விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்த சிலாங்கூர் வேளாண் சந்தை திட்டத்தையும், ஒரு மொத்த சந்தையையும் மாநில அரசு செயல்படுத்தியது. சிலாங்கூர் வேளாண்மை சந்தை மார்ச் 27 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ரிம13 மில்லியன் விற்பனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.