NATIONAL

சலூன் மற்றும் இரவு சந்தைகள் திறப்பதற்கான எஸ்ஓபிகளை சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு நடத்தும் !!!

7 ஜூன் 2020, 10:44 AM
சலூன் மற்றும் இரவு சந்தைகள் திறப்பதற்கான எஸ்ஓபிகளை சிலாங்கூர் அரசாங்கம் ஆய்வு நடத்தும் !!!

கோல லங்காட், ஜூன் 7:

முடிதிருத்தும் கடைகள், சலூன் மற்றும் இரவு சந்தைகள் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்கும் முன் சிலாங்கூர் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். சீரான செயலாக்க நடைமுறை (எஸ்ஓபி) அனைத்து ஊராட்சி மன்றங்களிடம் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“உண்மையில், கடந்த வாரம் நாங்கள் அவர்களிடம் (ஊராட்சி மன்றங்கள்) தயாராக இருக்கச் சொன்னோம். நமக்கு முக்கியமான பிரச்சினை எஸ்ஓபியே. நாங்கள் (மாநில அரசு) அவர்களின் திட்டங்களைக் காண விரும்புகிறோம். நேற்றைய அறிவிப்பு முன்பை விட சிறந்தது, ஏனென்றால் எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்கு முன் ஐந்து நாட்களுக்கு ஆரம்ப காலம் எங்களுக்கு வழங்கப்பட்டது," என்று தாமான் லங்காட் முர்னியில் வசிப்பவர்களுக்கு இன்று உதவிகளை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

சிகையலங்கார நிபுணர் மற்றும் அழகு நிலையம் சேவை ஜூன் 10 முதல் இயங்கக்கூடும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்தார். ஜூன் 15 முதல் இரவு சந்தை நடவடிக்கைகள், பஜார் மற்றும் திறந்த சந்தை ஸ்டால்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.