SELANGOR

பிகேபி நிர்வாகம்: சிக்கல்களை எதிர் நோக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் !!!

6 ஜூன் 2020, 12:23 PM
பிகேபி நிர்வாகம்: சிக்கல்களை எதிர் நோக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் !!!

ஷா ஆலம், ஜூன் 6:

கோலா லங்காட்டில் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) நிர்வாகத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். மாவட்ட அதிகாரி முகமட் ஜுஸ்னி ஹாஷிம், பிரச்சினையில் வசிப்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்கள் வேலைக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“அவர்கள் 24 மணி நேர நடவடிக்கை  அறைக்கு வரலாம். உதவி அனைவருக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை. மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே உதவ முடியும். அவர்கள் கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிடி) அமலாக்கத்தின் கீழ் இல்லை. எனவே சிக்கலான நபர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்," என்று அவர் இன்று சிலாங்கூர் இன்றுக்கு  கூறினார்.

மொஹட் ஜுஸ்னி குடியிருப்பாளர்களுக்கு வசதியாக, குடும்பத்திற்கு தேவையான பொருட்களை அனுப்ப அனுமதித்தார். ஆனால் நுழைவாயிலில் மட்டுமே அனுப்ப முடியும் என்று கூறினார். "இன்றுவரை, மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

கெஎல்ஐஏ- இல் துப்புரவு நிறுவனங்களுடன் பணிபுரிந்து 20 வெளிநாட்டினர் தங்கியிருந்ததைத் தொடர்ந்து தாமான்  லங்காட்மூர்னி மற்றும் தாமான்  லங்காட்உத்தாமா ஆகியவை பிகேபி  நிர்வாகத்திற்கு உட்படுத்தப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.