SELANGOR

ஜயன்ட் பேரங்காடி மீண்டும் செயல்படத் தொடங்கியது !!!

5 ஜூன் 2020, 9:33 AM
ஜயன்ட் பேரங்காடி மீண்டும் செயல்படத் தொடங்கியது !!!

ஷா ஆலம், ஜூன் 4:

ஷா ஆலம் செக்சன 13-இல் உள்ள ஜயன்ட் பேரங்காடி அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மிகவும் கடுமையான தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மீண்டும் வழக்கம் போல் இயங்குகிறது. தற்காலிகமாக மூடுவதற்காக சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) நோட்டீஸ் சமீபத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடும் ஒரு பேரங்காடி கோவிட் -19 நேர்மறை தொற்று நோய் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று அதன் நிர்வாகம் தெரிவித்தது.

" நாங்கள் இப்போது வழக்கம்போல எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்போடு முன்னுரிமையாக செயல்படுகிறோம், மேலும் ஜயண்ட் பேரங்காடி மிக உயர்ந்த தரத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று அவர் இன்று பேஸ்புக் வழியாக தெரிவித்தார். அதே நேரத்தில், ஜயன்ட் பேரங்காடிக்கு செல்லும்போது சுத்தமாக இருப்பதிில்  வாடிக்கையாளர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். "உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி, இங்குள்ள அனைத்து பேரங்காடியின்  வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.