RENCANA PILIHAN

கோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது

2 ஜூன் 2020, 11:44 AM
கோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது
கோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது

ஷா ஆலம், ஜூன் 2:

கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும் நேற்று 11 சம்பவங்களாக இருந்த நிலையில் இன்று ஆறு சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,926 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

" கோவிட்-19 வைரஸ் தொடர்ந்து நம்மிடையே இருந்து வருகிறது. நாம் புதிய பழக்க வழக்கத்தை அமல்படுத்த வேண்டும். இதுவே நமக்கு நல்லது," என்று எஸ்திஎப்சி கூறியிருக்கிறது. மலேசியாவில் மொத்தம் 7,877 கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.