RENCANA PILIHAN

வெளி நாட்டவர்களை சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்களை மாநில அரசாங்கம் கண்காணித்து வரும்- மந்திரி பெசார்

29 மே 2020, 3:31 PM
வெளி நாட்டவர்களை சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்களை மாநில அரசாங்கம் கண்காணித்து வரும்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 29:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஒரு துப்புரவு நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட புதிய கோவிட் -19 தொற்று நோய் கிளஸ்டரின் வளர்ச்சியை சிலாங்கூர் கண்காணித்து வருகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். புதிய சம்பவங்கள்  கட்டுப்பாட்டுக்குள்  இருக்க சிலாங்கூர் கோவிட்-19 நடவடிக்கை அறை மற்றும் சிலாங்கூர் சுகாதார இலாகா ஆகியவை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மேலும்  தெரிவித்தார்.

" கோலா லங்காட்டில் வசிக்கும் கேஎல்ஐஏ துப்புரவு தொழிலாளர்களிடையே 20 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இன்று) கோலா லங்காட்டில் 14 நாட்களுக்கு மேலாக சம்பவங்கள் இல்லாமல் மஞ்சள் மண்டல அந்தஸ்தை அடைந்தது," என்று அவர் டிவிட்டர் வழியாக பதிவு செய்தார் . தடுப்புக்காவல் நடவடிக்கை உட்பட அனைத்து கேஎல்ஐஏ தொழிலாளர்களையும் பரிசோதனை செய்ய மாநில தேசிய பாதுகாப்பு மன்றம்  இன்று அவசர உத்தரவு பிறப்பித்ததாக அமிருடின் தெரிவித்தார்.

"துப்புரவுத் தொழிலாளர்களிடையே 80 க்கும் மேற்பட்ட நேரடி தொடர்புகள் மூலம்  பரவுவதைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப் படுவதையும் மாநில சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. இதுவரை அனைத்து சம்பவங்களும்  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவை" என்று அவர் எழுதினார். இன்று, சிலாங்கூரில் கோவிட் -19 இன் புதிய சம்பவங்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஒற்றை இலக்கங்களுக்குப் பிறகு 28 சம்பவங்கள் பதிவு செய்த பின்னர் மீண்டும் இரண்டு இலக்கங்களாக உயர்ந்தது. இதற்கிடையில், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு விடுதிகளை உள்ளடக்கிய துப்புரவு நிறுவனங்களின் புதிய கிளஸ்தர்  கண்டு பிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு (எம்ஓஎச்) அறிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.