NATIONAL

8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார்

28 மே 2020, 2:53 PM
8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் செலாங்கா செயலியை பயன்படுத்தி உள்ளனர்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 28:

செலாங்கா செயலியை (பாதுகாப்பான முறையில் நுழைவோம்) நேற்று வரை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி தெரிவித்தார். மாநில சுகாதார இலாகா கோவிட்-19 தொற்று நோய் பரவலை கண்டறிய சிலாங்கூர் மாநிலம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியது என அவர் பெருமிதம் கொண்டார்.

" பேனா மற்றும் காகிதத்தை பயன்படுத்தி எழுதும் முறையை மாற்றி செலாங்கா செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் கோவிட்-19 தொற்று நோய் கொண்டவர்களை மிகச் சுலபமாக கண்டறிய இயலும். நேற்று வரை செலாங்கா செயலியை 8.3 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர்," என்று தமது முகநூலில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.