NATIONAL

பிகேபிபி காலகட்டத்திற்கு பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்- தீயணைப்புப் படை

22 மே 2020, 11:57 PM
பிகேபிபி காலகட்டத்திற்கு பிறகும் கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்- தீயணைப்புப் படை

புத்ராஜெயா, மே 23:

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் (ஜெபிபிஎம்) நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்திற்கு பிறகும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என ஜெபிபிஎம்-இன் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹாம்டான் வாஹீட் தெரிவித்தார். சுகாதார அமைச்சு அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 ஆபத்தை எதிர் நோக்கியுள்ள கட்டிடங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது என்றார்.

" தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கோவிட்-19 தொற்று நோய் ஆபத்து என கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்," என்று கோவிட்-19 நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன் வரிசை பணியாளர்களுடன் நடைபெற்ற நேரலை காணோளியில் இவ்வாறு முகமட் ஹாம்டான் வாஹீட் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.