RENCANA PILIHAN

கோவிட்-19: சிலாங்கூரில் மூன்று பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம்

21 மே 2020, 1:10 PM
கோவிட்-19: சிலாங்கூரில் மூன்று பகுதிகள் மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம்

ஷா ஆலம், மே 21:

செப்பாங், டெங்கில் மற்றும் உலு கிள்ளான் ஆகிய பகுதிகள் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்களும் அதிகரித்ததை தொடர்ந்து மஞ்சள் மண்டலங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) அதன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு மேற்கண்ட பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப் பட்டது  குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்று நண்பகல் 12 மணி வரையும் செப்பாங் பகுதியில் மூன்று சம்பவங்களும் மற்றும் டெங்கில் மற்றும் உலு கிள்ளானில் முறையே ஒரு சம்பவமும் ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.