RENCANA PILIHAN

மந்திரி பெசார்: சுல்தானின் ஆலோசனையை பின்பற்றுங்கள்; நேர்மையான அரசியல் சித்தாந்தத்தை கடைபிடிக்க வேண்டும்

18 மே 2020, 7:03 AM
மந்திரி பெசார்: சுல்தானின் ஆலோசனையை பின்பற்றுங்கள்; நேர்மையான அரசியல் சித்தாந்தத்தை கடைபிடிக்க வேண்டும்

ஷா ஆலம், மே 18:

நேர்மையின் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும்  என்றும் குறிப்பாக நாடு கோவிட் -19 உடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது சந்தர்ப்பவாத அரசியல் செய்யாதீர்கள் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கூறினார். மாநில அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று எச்சரித்த மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் நினைவூட்டலை அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

" நாங்கள் அனைவருக்கும் தற்போது எதிர் நோக்கி வரும் சூழ்நிலையை தீர்க்க பெரிய பொறுப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் அரசியலாக்குவதில்லை, வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்போதே, மிக முக்கியமான விஷயம் கோவிட் -19 உடன் போராடுவது, இது நமது  உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது, " என்று அவர் இன்று சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். மார்ச் 16 ம் தேதி, 14 வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் தொடக்க விழாவில் பேசிய சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ், சிலாங்கூர் அரசாங்கத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று மாநில சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

" சிலாங்கூரின் நிர்வாகத்தையும் அரசாங்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட மாண்புமிகு உறுப்பினர்களை தாம் விரும்பவில்லை" என்று அவர் கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய அரசியல் அமைதியின்மையைக் கண்டு மக்கள் சோர்வடைந்துள்ளனர், நாடு பொருளாதார  மந்த நிலையையும் கோவிட் -19 யையும் எதிர்கொண்டுள்ளது என்றார். "அரசியல்வாதிகள் பெரும்பாலும் முடிவற்ற அரசியல் பிரச்சினைகளில் ஈடுபடுவதாகவும், மக்களின் நலனை நிர்வகிப்பதற்கான நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கான அவர்களின் உண்மையான பொறுப்பை புறக்கணிப்பதாகவும் காணப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.