NATIONAL

மந்திரி பெசார்: சிலாங்கூர் வலுவாக இருக்கிறது; அரசியல் தாக்குதலை எதிர் கொள்ளும் !!!

15 மே 2020, 3:59 AM
மந்திரி பெசார்: சிலாங்கூர் வலுவாக இருக்கிறது; அரசியல் தாக்குதலை எதிர் கொள்ளும் !!!

ஷா ஆலம், மே 15:

அரசியல் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ள போதிலும் பாக்காத்தான் ஹாரப்பன் (பக்காத்தான்) அரசாங்கமாக சிலாங்கூரின் நிலைப்பாடு வலுவாக இருக்கிறது  என்று மந்திரி பெசார் பெசார் கூறினார். நேற்றிரவு முகநூலில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் மூலம் கெடா மாநில அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது மாநிலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“ சிலாங்கூர் அப்படியே இருக்கும் என்று நான் நம்புகிறேன். (எந்தவொரு கட்சியும்) (மாநில) அரசாங்கத்தை மாற்ற விரும்பினால், அவர்கள் 16 சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பெரிய பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ”என்று சிலாங்கூர் பிகேஆர் கட்சியின் தலைவருமான அமிருடின்  கூறினார். மாநில சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவில் எந்த  மாற்றமும் இல்லை என்றும் பிகேஆர், டிஏபி, அமானா  மற்றும் பெர்சத்து கட்சியின் சில சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட நெருக்கமாக இருக்கின்றனர் என்றும் அவர்  வலியுறுத்தினார்.

இருப்பினும், அரசியல் தாக்குதல்கள் சாத்தியம் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் சிலாங்கூரில் உள்ள பாக்காத்தான் தலைவர்கள் இந்த விஷயத்தை கையாள தயாராக இருக்கின்றனர். “ இது கெடா மற்றும் பேராக்கில் மட்டும் நடக்கவில்லை. தற்போதைய சூழலில் சிலாங்கூர் பல்வேறு வழிகளில் தாக்கப்படும் அல்லது மாநில அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் தவறான வாதங்கள் எழுப்பப்படும், ”என்றார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் டிஏபி (16), அமானா (எட்டு), பெர்சத்து (ஐந்து), அம்னோ (ஐந்து) மற்றும் பாஸ் (ஒன்று) மற்றும்  21 பிகேஆர் பிரதிநிதிகள் இருந்தனர். இருப்பினும், இரண்டு பிகேஆர் சட்ட மன்ற உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

பாசீர் பிஞ்சி சட்டமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ சுவான் தலைமையில் நடைபெற்ற  இந்த முகநூல் கலந்துரையாடலில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யியோவ் மற்றும் கெடா மந்திரி  பெசார் டத்தோ ஸ்ரீ  முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.