RENCANA PILIHAN

மந்திரி பெசார்: சிறப்பு உதவி நிதி மிக விரைவில் அறிவிக்கப்படும்

12 மே 2020, 5:26 AM
மந்திரி பெசார்: சிறப்பு உதவி நிதி மிக விரைவில் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், மே 12:

சிலாங்கூரில் அரசு ஊழியர்களுக்கான நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். இந்த விவகாரம் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அவர் மேலும்கூறினார். ஆனால் இதுவரை எந்த ஒரு முடிவும் செய்யப்படவில்லை என்று டத்தோ அமிரூடின் ஷாரி கூறினார்.

" கடவுளின் ஆணையினால் , அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு சில நாளில் அறிவிப்பேன்" என்று இன்று ரமலான் மாத நன்கொடை விழாவில் சந்தித்தபோது அவர் கூறினார். நேற்று, பொதுச் சேவை இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ மொஹமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான், அரசு ஊழியர்களுக்கு மே 20 அன்று நோன்பு பெருநாள் சிறப்பு உதவி நிதியாக ரிம 500 மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ரிம 250 கிடைக்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.