NATIONAL

அதிகமானவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டால் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம்- மந்திரி பெசார்

11 மே 2020, 3:13 PM
அதிகமானவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டால் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 11:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிடி) கீழ் உள்ள பகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை மூலம் அதிகமான நபர்களைக் கண்டறிய முடிந்தால், கோவிட் -19 மாநிலத்தில் பரவுவதை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  நம்புகிறார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் ஓத்மான் சந்தையைச் சுற்றி தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் சிலாங்கூரில் கோவிட்-19 இன் புதிய சம்பவங்கள் அதிகரிக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எதிர்பார்க்கிறார்.

"அதிர்ஷ்டவசமாக, இன்று புதிய சம்பவங்கள்  குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது , ஆனால் ஓத்மான் பிஜே சாலை சந்தையைச் சுற்றி பரிசோதனை செய்து வருவதால், வரும் நாட்களில் கோவிட்-19 சம்பவங்கள்  சற்று  அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்று நோய் அதிகமான மக்களிடம்  கண்டுபிடிக்கப்பட்டால் மிகவும் நல்லது. இதன் மூலம் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைக்கும். சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்," என்று அவர் டிவிட்டரில் எழுதினார்.

இன்று நண்பகல் நிலவரப்படி, சிலாங்கூர் நேற்றுடன் ஒப்பிடும்போது மூன்று புதிய கோவிட் -19 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது வரையில்மொத்தம் 1,607 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், ஒத்மான் சாலை சந்தையில் வசிப்பவர்கள் மீது சுகாதார அமைச்சு கோவிட் -19 சோதனை நடத்தும் என்றார். கோவிட்-19 நோய் புதிய சம்பவங்கள்  26 பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய பின்னர், மே 23 வரை இந்த பகுதி பிகேபிடி நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.