RENCANA PILIHAN

நிபந்தனைக்கு உட்பட்ட பிகேபி: வணிகர்கள் நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்- ஆட்சிக்குழு உறுப்பினர்

2 மே 2020, 4:05 AM
நிபந்தனைக்கு உட்பட்ட பிகேபி: வணிகர்கள் நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்- ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம், மே 2:

எதிர்வரும் மே 4-இல் தங்களது வணிகத்தை தொடங்கவிருக்கும் வியாபாரிகள் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்கேஎன்) வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற  ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிபி) வெற்றிக்கு இது உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் தங்களது அமலாக்க அதிகாரிகளின் வழி கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர். அனைவரும் பிகேபிபி நடைமுறைகளை பின்பற்றி நடப்பதை இந்த அதிகாரிகள் உறுதி செய்வர். பிகேபிபி வெற்றிக்கு இது மிக முக்கியமான ஒன்று," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.