NATIONAL

மலேசியாவில் கோவிட்-19 சிவப்பு மண்டலங்கள் குறைந்து வருகிறது

26 ஏப்ரல் 2020, 3:39 PM
மலேசியாவில் கோவிட்-19 சிவப்பு மண்டலங்கள் குறைந்து வருகிறது

புத்ராஜெயா, ஏப்ரல் 27:

கடந்த வாரத்தில், மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பச்சை மண்டலமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட 1,200 பகுதிகளில், இப்போது ஐந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புகளை கொண்டுள்ளன. செயலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இன்றி, 75 சதவிகித பகுதிகள் பச்சை மண்டலமாக உள்ளன.

பேராக், கெடா, பினாங்கு, பெர்லிஸ், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில், சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலங்களாக குறிக்கப்பட்ட பகுதிகள் ஏதும் இல்லை. இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 20-க்கும் குறைந்தே பாதிப்புகள் உள்ளன. சிவப்பு மண்டலம் 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஆரஞ்சு மண்டலம் 20க்கும் மேற்பட்டது செயலில் உள்ள பாதிப்புகளைக் குறிக்கிறது.

ஒன்று முதல் 20 செயலில் உள்ள பாதிப்பைக் கொண்ட பகுதிகள் மஞ்சள் மண்டலமாகவும், பச்சை மண்டலம் பூஜ்ஜிய செயலில் உள்ள பாதிப்பைக் கொண்ட பகுதிகளாகவும் உள்ளன.

ஏப்ரல் 25, 2020 நிலவரப்படி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செயலில் உள்ள பாதிப்புகளின் தகவல்களின்படி, நாடு முழுவதும் ஐந்து பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஜோகூரில் உலு பெனுட், நெகேரி செம்பிலனில் உள்ள லாபு, சரவாக்கில் கூச்சிங் மற்றும் சமராஹான் மற்றும் சிலாங்கூரில் உலு லங்காட் ஆகும்.

#மலேசியா இன்று

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.