NATIONAL

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 12 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

24 ஏப்ரல் 2020, 12:27 AM
வெளிநாட்டில் இருந்து திரும்பிய  12 பேரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

ஷா ஆலம், ஏப்.24-

சிலாங்கூரில் நேற்று அடையாளம் காணப்பட்ட 12 புதிய சம்பவங்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை உட்படுத்தியவை என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நேற்று முன்தினம் தொடங்கி மாநிலத்தில் புதிய கோவிட்-19 சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை” என்றார் அவர்.

“நேற்று பதிவு செய்யப்பட்ட 12 புதிய சம்பவங்கள் யாவும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார் அவர்.

உள்நாட்டவர்களில் எவருக்கு நேற்று தொற்று சம்பவம் இல்லை என்றும் முந்தைய நாளிலும் இதே நிலையே. எனவே அனைவரும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அமிருடின் வலியுறுத்தினார். முன்னதாக, நேற்று வரை சிலாங்கூரில் மொத்தம் 1,360 கோவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணியாளர்கள் குழு அறிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.