RENCANA PILIHAN

சிலாங்கூரில் 11 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள்; பிகேபியை பின்பற்றுங்கள் - எஸ்திஎப்சி

21 ஏப்ரல் 2020, 1:29 PM
சிலாங்கூரில் 11 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள்; பிகேபியை பின்பற்றுங்கள் - எஸ்திஎப்சி
சிலாங்கூரில் 11 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள்; பிகேபியை பின்பற்றுங்கள் - எஸ்திஎப்சி

ஷா ஆலம், ஏப்ரல் 21:

இன்று நண்பகல் 12 வரை சிலாங்கூர் மாநிலத்தில் 11 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) டிவிட்டரில் தெரிவித்தது.நேற்றைய தினத்தை விட இன்று சம்பவங்கள் அதிகரித்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது.

" நேற்றோடு ஒப்பிடும் போது இன்று கோவிட்-19 நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள்," என்று எஸ்திஎப்சி டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 57 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று மூன்று மரணங்கள் ஏற்பட்டு,  இதுவரையிலான மரண எண்ணிக்கை 92-ஆகவே உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இன்று 54 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,349 ஆக உயர்ந்திருக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.