NATIONAL

பிகேபி ஏப்ரல் 28 வரை நீட்டிப்பு - பிரதமர்

10 ஏப்ரல் 2020, 9:50 AM
பிகேபி ஏப்ரல் 28 வரை நீட்டிப்பு - பிரதமர்

புத்ராஜெயா, ஏப்ரல் 10:

நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) ஏப்ரல் 28 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசின் இன்று நேரலை சிறப்பு அறிவிப்பில் இவ்வாறு நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

கோவிட்-19 பாதிப்பை தடுக்க மலேசிய சுகாதார அமைச்சின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை தடுக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கி ஏப்ரல் 14 வரை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இது, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நோன்பு பெருநாள் கூட நாம் கொண்டாட முடியாமல் போகலாம் என்று பிரதமர் கூறியது பிகேபி நடவடிக்கை ஏப்ரல் 28 முடிந்து மேலும் நீடிக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.