SELANGOR

மந்திரி பெசார் உணவு பொருட்கள் மற்றும் முகமூடிகளை இலவசமாக வழங்கினார் !!!

2 ஏப்ரல் 2020, 1:21 AM
மந்திரி பெசார் உணவு பொருட்கள் மற்றும் முகமூடிகளை இலவசமாக வழங்கினார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 2:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதை தொடர்ந்து அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுபாடு ஆணையினால் பாதிக்கப்பட்டுள்ள 10,000 பொது மக்களுக்கு அடிப்படை உணவு பொருட்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார். நிர்வானா குழும நிறுவனம் மற்றும் ஸ்பான்லேன்ட் நிறுவனம் போன்ற நிறுவனங்களுடன்  இணைந்து அமிருடின் ஷாரி 10 நாட்களுக்கு வேண்டிய அரிசி, பிஸ்கெட் மற்றும் சீனி ஆகிய பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி, 150,000 முகமூடிகளை நேற்று தொடங்கி சனிக்கிழமை வரை தாமான் மெலாவத்தி ஈ5 பொது மண்டபத்தில் மந்திரி பெசார் வழங்கி வருவது பரிவு மிக்க அரசாங்கமாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் திகழ்கிறது என்று நாம் கூறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.